ஆப்நகரம்

காதலன் மீது ஆசிட் அடிச்சு குருடாக்கிய பெண்... 'ஆண்டி லவ்'வால் வாலிபருக்கு நேர்ந்த துயரம்

கேரளாவில் 35 வயதான பெண் ஒருவர் இளைஞர் முகத்தில் ஆசிட் வீசி ஒரு கண்ணை குருடாக்கிய சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Nov 2021, 6:20 pm
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாரைச் சேர்ந்தவர் ஷீபா (வயது 35) செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ஷீபாவுக்கு பெயிண்டர் சந்தோஷ் என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஷீபாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் பூஜாபுரத்தைச் சேர்ந்த அருண் (28) என்ற வாலிபருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
Samayam Tamil acid attack kerala


ஆனால், ஷீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருக்கும் விஷயம் அருணுக்கு தெரியாது என கூறப்படுகிறது. இந்த சூழலில் ஷீபா முதல் கணவன், குடும்பத்தை விட்டுவிட்டு அருணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதனிடையே, ஷீபாவின் திருமண விவகாரம் தெரிந்ததும், அருண் ஷீபாவை விட்டு ஒதுங்கியுள்ளார். மேலும், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த ஷீபா கடந்த 16 ஆம் தேதி அடிமாலி, புனித அந்தோணியார் தேவாலயம் அருகே உள்ள இரும்புபாலத்தில் வைத்து அருணை சந்திக்க அழைப்பு விடுத்தார். அதன்படி, அங்கு வந்த அருணிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த ஷீபா, திடீரென மறைத்து வைத்திருந்த ஆசிடை அருணின் முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி பதைபதைக்க செய்துள்ளது.

சம்பளம்தான் வாழ்வாதாரம்... சஸ்பெண்ட் கால படித் தொகையை கேட்கும் ராஜேஷ் தாஸ்...

அந்த வீடியோவில், ஷீபா எதையோ அருணின் முகத்தில் ஊற்றுவதும், அருண் தட்டுத்தடுமாறி நடப்பதும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்து வரும் இடுக்கி போலீசார் கூறியதாவது, அருண் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததால் ஷீபா அவரை அடிமாலிக்கு வரவழைத்து ஆசிட் வீசியுள்ளார். அதன் பிறகு அருண் அங்கமாலியில் முதலுதவி சிகிச்சை பெற்று, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருண்குமாரின் வலது கண்ணின் பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், ஷீபா தாக்குதலுக்கு ரப்பர் லேடெக்ஸை உறைய வைக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் ஃபார்மிக் அமிலத்தைப் பயன்படுத்தினார் என்றும் தாக்குதலின்போது ஷீபாவுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறினர் என போலீசார் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி