ஆப்நகரம்

கணவனுக்கு தண்ணி காட்டி முதலாளியுடன் உறவு, இளம்பெண்ணை துரத்திய உல்லாச வீடியோக்கள்

கோவை அருகே முதலாளியுடன் நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் உறவுக்கு மறுத்த பெண்ணுக்கு ஆபாச மிரட்டல்

Samayam Tamil 2 Dec 2020, 2:43 pm
கோவையைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு (32) திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பெண் சிட்கோ பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அந்த ஒர்க் ஷாப்பை நடத்தி வந்த சந்திரன் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமண உறவை மீறிய காதல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


இதனால் இருவரும் பல இடங்களுக்கு சுற்றி திரிந்து ஹோட்டல்களில் அறை எடுத்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. சில நேரங்களில் வேலை நேரத்திலும் காதல் சிலுமிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் நேரங்களில் சந்திரன் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதனிடையே இருவருக்குள்ளும் பண மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வேலையை விட்டு நின்ற அந்த பெண் சந்திரனுடன் இருந்த உறவையும் முறித்துக்கொண்டார். இந்நிலையில், தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த வீடியோக்களை காட்டி அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உறவுக்கு அழைத்துள்ளார் சந்திரன்.

பாதிக்கப்பட்ட பெண் அதற்கு மறுக்கவே, தன்னுடன் மீண்டும் நெருக்கமாக இல்லாவிட்டால் வீடியோக்களை அனைத்தையும் உனது குடும்பத்திடம் காட்டிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். சந்திரனின் கொடுமையை தாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் சந்திரனை குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஜனவரியில் தமிழக பள்ளிகளைத் திறக்க திட்டம்? அரசுக்கு அழுத்தம்!

அதன் பேரில் ஒர்க்ஷாப் ஓனர் சந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஆபாச வீடியோக்களை அழித்ததோடு சிறையில் அடைத்தனர். தகாத உறவு என்றும் ஆபத்துதான் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே சாட்சி.

அடுத்த செய்தி