ஆப்நகரம்

கணவனுக்காக காத்திருந்த பெண் பலாத்காரம்..! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 24 Aug 2020, 5:14 pm
இரவு நேரத்தில் ஆள் இல்லாத வீட்டில் புகுந்து இளம்பெண்ணை காயப்படுத்தி, பலாத்காரம் செய்துள்ள எதிர்வீட்டு காரரின் செயல் அண்ணாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil file pic


சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் தம்பதி மோகன் (36), சுமதி (31). இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வேலைக்கு சென்ற மோகன், தான் வருவதற்கு நள்ளிரவு ஆகும் என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார். அதையடுத்து, இரவு ஆனதும் வழக்கம்போல தூங்க சென்ற சுமதி, கணவன் வருவதற்காக கதவை திறந்து வைத்துள்ளார்.

அதை கவந்துகொண்டிருந்த எதிர் வீட்டுக்காரரான முருகானந்தம் என்பவர், சுமதி தூங்கியதும் வீட்டிற்குள் சென்று அருகில் படுத்துள்ளார். பின்னர், சுமதியின் வாயை பொத்திக்கொண்ட அவர் பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் கதறி அழுதுகொண்டிருந்த சுமதி, வீட்டிற்கு வந்த கணவனிடம் நடந்ததை கூறினார். அதையடுத்து, முருகானந்தம் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகானந்தத்தை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

கைலாசாவில் உணவகம்: மதுரை ஹோட்டல் உரிமையாளர் மீது பரபரப்பு புகார்..!

இரவு நேரத்தில் வீட்டு உறுப்பினர்களுக்காக காத்திருக்கும் பெண்கள், கதவை தாளிட்டு மூடிக்கொண்டாள் இதுபோன்ற ஆபத்துகள் நேரிடாமல் தவிர்க்கலாம் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், பெண்கள் எத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அவர்களை காம கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் மாறும் வரை இத்தகையை சம்பவங்கள் தொடரும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த செய்தி