ஆப்நகரம்

கோவையில் மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம்: கமிஷ்னர் வைத்த ‘செக்’!

விபச்சாரம் நடைபெற்றுவருவதாக வந்த புகாரின் அடிப்படையில் கோவையில் அனைத்து மசாஜ் மையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Oct 2019, 3:06 pm
கோவையில் உள்ள முக்கியமான ஹோட்டல்கள், தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் பல மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.
Samayam Tamil Untitled collage (4)


10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... ஆயுள் தண்டனை அறிவித்த நீதிமன்றம்.. அப்படி போடு.!

இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டார். இதன்பேரில் கடந்த ஒரு வாரமாக போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். கோவை மாநகரில் சுமார் 60க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது. இதில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

குழந்தை வேண்டி இரண்டாவது திருமணம்..! காரியம் முடிந்ததும் சித்ரவதை.. இளம்பெண் குழந்தையுடன் தற்கொலை..

இதுதொடர்பாக கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கிழக்கு மாநகர பகுதி சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் அவர்களும் அனைத்து மசாஜ் சென்டர் உரிமையாளர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்; மூளையாக செயல்பட்ட முருகன் சரண்!

கூட்டத்தில் உதவி கமிஷனர் சோமசுந்தரம் பேசிய போது, “மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றில் உரிமை பெறாமல் மசாஜ் சென்டர் நடத்துவது சட்டபடி குற்றமாகும். மேலும் இனிமேல் மசாஜ் சென்டர் நடத்தக்கூடாது. மீறி நடத்தினால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மசாஜ் சென்டருக்கு இடம் கொடுக்கும் லாட்ஜ் உரிமையாளர்களும் கட்டிட உரிமையாளர்களும் கைது செய்யப்படுவார்கள்” என்று பேசினார்.

அடுத்த செய்தி