ஆப்நகரம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோதல்- மணமக்கள் உட்பட 15 பேர் காயம்!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி சத்தம் காரணமாக ஏற்பட்ட மோதலில் மணமக்கள் உட்பட 15 பேர் காயம்!

Samayam Tamil 1 Jun 2019, 12:52 pm
ஹைதரபாத் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி சத்தம் காரணமாக ஏற்பட்ட மோதலில் மணமக்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.
Samayam Tamil திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோதல்- மணமக்கள் உட்பட 15 பேர் காயம்!
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோதல்- மணமக்கள் உட்பட 15 பேர் காயம்!


தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம் துண்டிகல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குட்பல்லாபூரில் சுரம் சாய்பாபா திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி பொறுத்தப்பட்டு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது ஒலிபெருக்கி சரியாக வேலை செய்யவில்லை என திருமண வீட்டார் நிகழ்ச்சி அமைப்பாளருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது ஒலி பெருக்கி அமைப்பாளர் தன்னுடைய நண்பர்களான ரவுடிகள் சிலருக்கு தகவல் கொடுத்து அவர்களை திருமண மண்டபத்திற்கு வரவழைத்தார்.

திருமண மண்டபத்திற்கு வந்த ரவுடிகள் மணமக்கள் உட்பட அனைவரையும் கட்டைகளால் தாக்கி, அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். பரிமாறுவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை கீழே கொட்டிய ரவுடிகள், திருமண வீட்டாருக்கு மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுவிட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த துண்டிகல் போலீசார், காயம் அடைந்த மணமக்கள் உட்பட 15 பேரை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து . தப்பியோடிய ஒலிபெருக்கி அமைப்பாளர், ரவுடிகள் ஆகியோரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

அடுத்த செய்தி