ஆப்நகரம்

இதுக்கு போயா துப்பாக்கில சுடுறது? மதுரையில் பரபரப்பு- 4 பேர் கைது, துப்பாக்கிகள் பறிமுதல்!

துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 4 பேரைக் கைது செய்து, அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Samayam Tamil 29 Aug 2019, 5:58 pm
மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் காரில் வந்த சிலர் கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil Gun Firing


ஆனால் அவர்கள் பணம் தர மீண்டும் மறுப்பு தெரிவித்தனர். அப்போது காரில் வந்த ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துள்ளார். பின்னர் ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் வானை நோக்கி சுட்டார்.

2 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாயும், கள்ளக்காதலனும் குண்டர் சட்டத்தில் கைது!

இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே காரில் வந்தவர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, ஆட்டோவில் தப்ப முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். புகைப்பட ஆதாரங்களைக் கொண்டு, அவர்கள் தனசேகரன், கார்த்திக், ஹரிகிருஷ்ணன், ராஜா என்று தெரியவந்துள்ளது.

மோடி, அமித் ஷாவை இப்படி பேசலாமா? போலீஸ் கையில் வசமாக சிக்கிய தமுமுக பிரமுகர்!

இவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.

சேலம் அருகே தண்டவாள கொக்கிகள் மாயமான விவகாரம்- விசாரணையில் புதிய திருப்பம்!

இந்நிலையில் திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சசிகுமார்(25) என்பவரும், சுங்கச் சாவடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி