ஆப்நகரம்

ஏர்வாடி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள்!

இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் 7 சிறுவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

Samayam Tamil 6 Nov 2019, 4:03 pm
உலகம் முழுவதும் நடைபெறும் குற்றச்சம்பவங்களுக்குப் பின் போதை முக்கியகாரணமாக இருக்கிறது. சிறுவயதிலேயே போதைக்கு அடிமையானதன் விளைவாக ஏர்வாடியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள்!


கடத்தல் கும்பலையே கடத்திய கும்பல்: சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஒரு ஆக்‌ஷன் சீன்!

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவை ஒட்டி காட்டுபள்ளி மனநலம் காப்பகம் உள்ளது. இங்கு சிகிச்சை பெற்றுவந்த கேராளாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நவம்பர் 4ஆம் தேதி மாயமானார்.

விளையாட்டாக நெற்றியில் வைத்து சுட்டேன், வெடிக்குமென தெரியாது - இளைஞர் விஜய்

பின்னர் நேற்று அதிகாலை காப்பகத்துக்கு அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். இந்நிலையில் தனது மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார் என இளம்பெண்ணின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 7 சிறுவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 14 வயதிலிருந்து 18 வயதிற்குட்பட்ட இந்த சிறுவர்கள் கஞ்சா போதையில் இளம்பெண்ணை காப்பகத்தில் இருந்து தூக்கிவந்துள்ளனர். பின்னர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர்: ‘கைதி’ படம் பார்த்த கொலைக் கைதி!

இதுகுறித்து கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அடுத்த செய்தி