ஆப்நகரம்

இறந்த தாயின் உடலை டிரம்மில் அடைத்து சிமெண்ட் பூசிய மகன்..! சென்னை திகில் சம்பவம்

உடல் நல குறைவால் உயிரிழந்த 86 வயதான தாயின் உடலை டிரம்மில் போட்டு, சிமெண்ட் மூலம் பூசி மூடிய மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 May 2022, 5:52 pm
சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகர், 2வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் 86 வயதான மூதாட்டி செண்பகம். அவருடன் 53 வயதான மகன் சுரேஷ் வசித்து வந்துள்ளார். சுரேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களாக தாய் செண்பகத்தை காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் சுரேஷிடம் தாய் குறித்து கேட்டுள்ளனர்.
Samayam Tamil chennai crime news


அதற்கு வயதான தாய் செண்பகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும், அவரை வீட்டில் இருந்த டிரம்மில் போட்டு சிமெண்ட் வைத்து பூசி மூடி விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, டிரம்மில் கிடந்த 86 வயதான மூதாட்டியின் உடலை, டிரம்மில் இருந்து எடுக்க முடியாத காரணத்தால் அந்த டிரம்முடன் சேர்த்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு , மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து 174 பிரிவின் கீழ் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி