ஆப்நகரம்

சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: தந்தை கத்தியால் குத்தியதில் ஒருவன் காயம்

வேலூர் அருகே நெக்கனாமலை கிராமத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 23 Apr 2019, 10:06 am
வேலூர் அருகே நெக்கனாமலை கிராமத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: தந்தை கத்தியால் குத்தியதில் ஒருவன் காயம்
சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: தந்தை கத்தியால் குத்தியதில் ஒருவன் காயம்


வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள நெக்கனாமலை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். பெருமாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆண்டி என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்த நிலையில், மீண்டும் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஆண்டி மற்றும் ரவி குடும்பத்தினர், பெருமாளின் மகளை கடத்தி சென்று வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே சிறுமி எங்கு தேடியும் காணாததால் தந்தை பெருமாள் மற்றும் உறவினர்கள், ரவி வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு அறையில் சிறுமியை அடைத்து வைத்து 7 பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டு அதிர்ந்தனர்.

இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தை பெருமாளை அவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை பழிவாங்கும் நோக்குடன் கத்தியை எடுத்து கொண்டு துரத்தியுள்ளார். இதில் குமார் என்பவனை பிடித்து கத்தியால் குத்தியதில் அவன் படுகாயமடைந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். சிறுமியும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆண்டி, சேட்டு, வேலு, அண்ணாமலை, ரவி உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி