ஆப்நகரம்

சிறுமியை கர்ப்பமாக்கி வீதியில் விட்டுச் சென்ற டிக்டாக் காதலன்..! வேலூரில் கொடுமை

வேலூர் அருகே கர்ப்பபான சிறுமியை வீதியில் துரத்திவிட்ட காதலனின் குடும்பத்தை போலீசார் கூண்டோடு பிடித்து கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 16 Oct 2020, 4:50 pm
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (19). இவர் அப்பகுதியில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். அதே சமயம் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில், சாந்தகுமாருக்கும், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 16 சிறுமிக்கும் டிக்டாக்கில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


இருவரும் மாறி மாறி வீடியோ வெளியிட்டு வந்ததோடு லைக்குகளையும், கமெண்டுகளையும் பகிர்ந்து வந்துள்ளனர். பின்னர் வழக்கம்போல செல்போன் எண்களை பகிர்ந்துகொண்ட இருவரும் காதலிக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் காதலனை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த சிறுமி, வில்லிவாக்கத்தில் இருந்து ராணிப்பேட்டைக்கு வந்துள்ளார்.

அந்த முதல் சந்திப்பிற்கு பிறகு ராணிப்பேட்டையில் உள்ள மலை கோயிலில் தாலி கட்டி திருமணமும் செய்துகொண்டு, தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். சில மாத குடும்ப வாழ்க்கைக்கு பிறகு சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில், மருமகளை பார்ப்பதற்காக சாந்தகுமாரின் குடும்பம் அவர்களது வீட்டுக்கு வந்துள்ளது. அப்போது சிறுமியின் குடும்பத்தை பற்றி விசாரித்தபோது, அவர் வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை கண்டறிந்துள்ளனர்.

நம்முடைய வித்து வேறொரு மண்ணில் இடமாறி விழுந்து விட்டதை ஏற்க முடியாது என்று கருதிய சாந்தகுமாரின் பெற்றோர், சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்காக அப்பகுதியில் இருந்த பாஷா என்பவரது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் கரு கலைக்கப்பட்டதையடுத்து, அவரை வீதிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். சிறுமியின் சூழ்நிலையை அறிந்துகொண்ட சிலர் அவரை ஒரு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

சிலிண்டர் போட போன இடத்துல மூதேவி செஞ்ச வேலைய பாருங்க!

அதன் பின்னர் சிறுமியை குறித்து குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சாந்தகுமாரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பிடித்து விசாரித்தனர்.

தொடர்ந்து, சிறுமியை குழந்தை திருமணம் செய்த குற்றத்தில் சாந்தகுமார், அவரது பெற்றோர், சித்தி, சட்டவிரோதமாக கருவை கலைத்த போலி மருத்துவர் பாஷா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பெற்றோரை விட்டு காதலனை நம்பி வந்து வீதியில் துறத்தப்பட்ட சிறுமியை அவரது தந்தை ஆதரவு கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி