ஆப்நகரம்

திருமணத்திற்கு சம்மதிக்காத மகளுக்கு விஷம் வைத்த பெற்றோர்!

தருமபுரி அருகே திருமணத்திற்கு சம்மதிக்காத மகளே, பெற்றோரை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 6 Mar 2019, 10:45 am
தருமபுரி அருகே திருமணத்திற்கு சம்மதிக்காத மகளே, பெற்றோரை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil திருமணத்திற்கு சம்மதிக்காத மகளுக்கு விஷம் வைத்த பெற்றோர்!
திருமணத்திற்கு சம்மதிக்காத மகளுக்கு விஷம் வைத்த பெற்றோர்!


தருமபுரி அருகே உள்ள அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவிக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். மாணவியின் பெற்றோருக்கு வயதாவதாலும், மாணவிக்கு மேலும் உடன்பிறந்த சகோதரிகள் மூன்று பேர் இருப்பதாலும் இந்த திருமண ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் மேலும் படிக்க விரும்பிய மாணவி, திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், மாணவியை தொடர்ந்து வற்புறுத்தியும், அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவிக்கு மதிய உணவில் மர்மமாக ஏதோ கலந்து கொடுத்துள்ளனர். இதை கண்ட மாணவியின் தங்கை, உணவில் விஷம் கலந்துள்ளது என்றும், அதை சாப்பிடு வேண்டாம் என்று கூறி மாணவியை எச்சரித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அந்த உணவை எடுத்துக் கொண்டு மகேந்திரமங்கலம் காவல் நிலையத்துக்கு சென்று, தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் காவல்துறையினர் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உணவில் விஷம் கலந்து கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து மாணவியின் பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், மாணவி மற்றும் அவரது தங்கைகளை குழந்தைகள் நலக் குழு பாதுகாப்பில் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமணத்திற்கு சம்மதிக்காத மகளே, பெற்றோரே விஷம் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி