ஆப்நகரம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப் பதிவு

சிறுமியை ஆட்டோவில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ரௌடியை காவல்துறையினர் கைது செய்து போஸ்கோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

Samayam Tamil 30 Apr 2019, 11:25 pm
சிறுமியை ஆட்டோவில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ரௌடியை காவல்துறையினர் கைது செய்து போஸ்கோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
Samayam Tamil பாலியல் வன்கொடுமை: ரவுடி போஸ்கோ சட்டத்தில் கைது
பாலியல் வன்கொடுமை: ரவுடி போஸ்கோ சட்டத்தில் கைது


சென்னை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராபின் (25). இவர் மீது பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவ வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ராபின் தனது நண்பரின் தங்கையான 17 வயது மஞ்சுளாவை (பெயர் மாற்றபட்டுள்ளது) ஆட்டோவில் கடத்தி சென்று துரைப்பாக்கம் பெருங்குடி ரேடியல் சாலையில் ஆட்டோவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். .பின்னர் மஞ்சுளாவை பாதி வழியிலேயே இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.

அங்கிருந்து நடந்தே வீட்டிற்கு திரும்பிய மஞ்சுளா பெற்றோரிடம் நடந்ததை கூறியதும் அவர்கள் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் ராபினை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்.

மேலும் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக ராபினின் நண்பர்கள் 3 பேரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி