ஆப்நகரம்

மைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; கொடுமை செய்த இளைஞன்- துணை போன தாய்!

பாலியல் சித்ரவதையில் ஈடுபட்ட இளைஞன் மற்றும் ஆதரவாக செயல்பட்ட அவனது தாய் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 5 Sep 2019, 12:57 pm
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பூதமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் சத்யராஜ்(24). இவரது தாய் செல்வம். இந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியை, கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.
Samayam Tamil Rape


ஆனால் அந்த மாணவி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். கடந்த வாரம் தனது பாட்டி வீட்டிற்கு மாணவி சென்றுள்ளார். அப்போது விவசாய நிலம் நிறைந்த பகுதியில் சத்யராஜ் இடைமறித்துள்ளார்.

வேலூரில் திருட வந்த வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்!

இதையடுத்து தன்னை காதலிக்குமாறு மாணவியை வற்புறுத்தி உள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, மாணவியிடம் தவறுதலாக நடக்க முயன்றுள்ளார். உடனே மாணவி கூச்சலிட்டுள்ளார்.

இதைக் கண்ட மாணவியின் தாய் மற்றும் ஊர் மக்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள் அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார். பின்னர் மாணவியின் தாய், சம்பந்தப்பட்ட இளைஞரின் வீட்டிற்கு சென்று நடந்த விஷயம் குறித்து சண்டை போட்டுள்ளார்.

சரக்கு அடிச்சிட்டு வாகனம் ஓட்டிய வாலிபருக்கு ரூ. 16,000 ஃபைன்

அதற்கு சத்யராஜின் தாய் தனது மகனைக் கண்டிப்பதற்கு பதில், மாணவியின் தாயாரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தாய் மற்றும் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.

சென்னையில் இப்படியுமா நடக்குது? பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்ற தாய், மகன்!

அடுத்த செய்தி