ஆப்நகரம்

நெஞ்சைப் பிளக்கும் துயரச் சம்பவம் - கோவை மாணவி மரணம் தொடர்பாக வானதி சீனிவாசன்!

கோவை மாணவி தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது என்று கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Samayam Tamil 14 Nov 2021, 1:53 pm
கோவையில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவியின் மரணத்துக்கு காரணமான ஆசிரியர் மற்றும் பள்ளியின் முன்னாள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்


அதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது, கோவையில் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், தாங்க முடியாத துயரமும் அடைந்தேன். தனியார் பள்ளியில் படித்து வந்த அந்த மாணவி ஆசிரியரின் துன்புறுத்தலால் அரசுப் பள்ளிக்கு மாறியிருக்கிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (11-11-2021) அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நெஞ்சைப் பிளக்கும் இந்த துயரச் செய்தியை கேள்விப்பட்டதும் உக்கடம் பகுதியில் உள்ள மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். 17 ஆண்டுகள் பெற்று வளர்த்த மகளை பறிகொடுத்துள்ள அந்த தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. எந்தத் தாய்க்கும் இப்படியொரு துயரம் நிகழக் கூடாது.

கர்ப்பிணி மருத்துவர் தற்கொலை? கணவரின் டார்ச்சரால் சிதைந்த வாழ்க்கை

12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு அவர் முன்பு படித்த தனியார் பள்ளியின் ஆசிரியரின் துன்புறுத்தல் காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பள்ளி முதல்வரிடம் புகார் அளி்த்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி