ஆப்நகரம்

வீட்டில் பிணங்கள், துர்நாற்றம் வீசியதால் வெளிப்பட்ட மர்மம்.. காஞ்சிபுரம் அதிர்ச்சி

காஞ்சிபுரத்தில் குடும்ப பிரச்சினையால் தாய், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Jun 2021, 5:06 pm
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பாத்தை அடுத்த உள்ளாவூர் அருகே குடும்ப தகராறு காரணமாக தனது ஆறு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil mother and daughter commit suicide due to family problem in kanchipuram
வீட்டில் பிணங்கள், துர்நாற்றம் வீசியதால் வெளிப்பட்ட மர்மம்.. காஞ்சிபுரம் அதிர்ச்சி


உள்ளாவூர் பகுதியை சேர்ந்த உமா என்பவருக்கும் அவரது கணவர் முருகனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த உமா தனது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் உமா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலை தொடர்ந்து உமா வீட்டின் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்ற போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் முழுக்க காயங்கள், ஆயுர்வேத பெண் மருத்துவர் அடித்துக்கொலை? கேரளாவை உலுக்கிய சம்பவம்

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி