ஆப்நகரம்

மனைவியை பிரித்த ஆத்திரம்; மாமியாரை குத்திக் கொலை செய்தமருமகன்..!

சென்னை, மடிப்பாக்கம் பகுதியில், மனைவியை பிரித்த ஆத்திரத்தில், மாமியாரை குத்திக்கொன்ற மருமகன் போலீசில் சரணடைந்தார்.

Samayam Tamil 8 Aug 2022, 6:21 pm
மடிப்பாக்கம், எத்திராஜூலு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், 10 நாட்களுக்கு முன்னர் மனைவி கீதாவுக்கும் இவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கீதா கோபித்துக்கொண்டு மடிப்பாக்கம், பஜனை கோவில் தெருவில் உள்ள தனது தாய் சித்ரா (61) வீட்டுக்கு வந்துள்ளார்.
Samayam Tamil madipakkam murder accused


இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சித்ராவின் வீட்டுக்கு சென்ற ஆறுமுகம், மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி, மாமியாரிடம் கேட்டுள்ளார். ஆனால், மாமியார் அதற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. மகளிடம் சண்டை போடுவதை தட்டி கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், அங்கு சமயலறையில் இருந்த கத்தியை எடுத்து, மாமியார் சித்ரா, மைத்துனர் உதயகுமார், (34) ஆகியோரை ஆறுமுகம் சராமாரியாக குத்தியிருக்கிறார். இந்த சண்டையில் ஆறுமுகமும் காயமடைந்தார். பின்னர், மடிப்பாக்கம், காவல்நிலையத்திற்கு சென்று ஆறுமுகம் ஆஜரானார்.

22 வயசுக்கு 40 வயசுடன் நெருக்கம்... ஹோட்டல் சந்திப்பு... மனைவி ஷாக்... 500 சவரன் அபேஸ்

சித்ரா, உதயகுமார் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். உதயகுமார் சிகிச்சையில் உள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார் கொலை வழக்கை பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி