ஆப்நகரம்

இரண்டு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை: மக்கள் அதிர்ச்சி !

திருப்பத்தூர் அருகே கணவன் வேறு பெண்ணுடன் தவறான உறவில் இருப்பதால் மனமுடைந்த மனைவி இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Mar 2019, 3:49 pm
திருப்பத்தூர் அருகே கணவன் வேறு பெண்ணுடன் தவறான உறவில் இருப்பதால் மனமுடைந்த மனைவி இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil sajlndlan


வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கொல்லங்குட்டை கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். வேலை செய்யும் இடத்தில் ஜெயக்குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜெயக்குமாரின் மனைவி மேனகா (24) க்கு தகவல் தெரிந்து இது குறித்து கேட்டுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது ஆனால் இதனையெல்லாம் பொருட்படுத்தாத ஜெயக்குமார் மீண்டும் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று இது குறித்து மேனகா கேட்டுள்ளார் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மேனகா தனது குழ்ந்தைகளான யமுனா (வயது 3), கோவினேஷ் 7 மாத குழந்தை ஆகிய இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த கந்திலி காவல் நிலைய போலிசார் சடலங்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து 3 பேர் தற்கொலை செய்துக்கொள்ள காரணமாக இருந்த ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து உண்மை நிலை உரிய விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று போலிசார் கூறினர். கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால் குடும்பமே தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி