ஆப்நகரம்

இளம் பெண்ணை வசியப்படுத்தி பாலியல் பலாத்காரம்: பாதிரியார் கைது

பாதிரியாருடன் விடுதி ஒன்றில் இருந்து வெளியே வந்த அந்த பெண்ணை கண்ட அவரது குடும்பதிற்கு நன்கு தெரிந்த நபர் ஒருவர், இதனை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Sep 2019, 2:12 pm
மும்பை: இளம் பெண்ணை வசியப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil arrest


மும்பையின் வசை பகுதியில் வழிபாட்டுக் கூடம் ஒன்றை நடத்தி வரும் பாதிரியார், பொதுமக்களின் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக கூறி வந்துள்ளார். அவரது மையத்திற்கு சென்று பிரார்த்தணை செய்து சிகிச்சை பெறுவோரிடம் அவர் கட்டணமும் வசூலித்து வந்துள்ளார்.

கோவையில் ஆட்டோ ஓட்டுநர் கொடூர கொலை- மர்ம நபர்கள் வெறிச்செயல்!

அந்த வகையில் தனது மன அழுத்த பிரச்ணைக்கு தீர்வு காண பாதிரியாரின் பிரார்த்தணை மையத்திற்கு தனது பெற்றோருடன் 21 வயதுடைய பெண் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து அப்பெண்னை தனது மையத்திலேயே விட்டு விட்டு செல்லுமாறு அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியை உலுக்கிய பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு; குற்றவாளிகள் சிறை சென்றது எப்படி?

பாதிரியாரின் கெட்ட எண்ணம் புரியாமல் அவர்களும் தங்களது பெண்னை நம்பி விட்டு சென்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பாதிரியார், அப்பெண்ணை வசியப்படுத்தி பல்வேறு விடுதிகளுக்கும், ஹோட்டல்களுக்கும் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண்ணும் தனது பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், பாதிரியாருடன் விடுதி ஒன்றில் இருந்து வெளியே வந்த அந்த பெண்ணை கண்ட அவரது குடும்பதிற்கு நன்கு தெரிந்த நபர் ஒருவர், இதனை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தங்களுக்கு தெரியாமல் பிரார்த்தணை மையத்தில் இருந்து தங்களது மகள் வெளியே சென்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து அவரிடம் கேட்ட போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண் கறியுள்ளார்.

பாவம் ஆட்டோ டிரைவர்; பிளஸ் டூ மாணவர்கள் செய்த பயங்கரம்- அதிர்ச்சி சம்பவம்!

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்த வசை போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்ற அளித்த அனுமதியின் பேரில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த பெண்ணின் உறவினர்கள் பாதிரியாரின் வழிபாட்டு மையத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி