ஆப்நகரம்

திருவண்ணாமலையில் பட்டப் பகலில் ஒருவர் வெட்டிக் கொலை!!

திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டர் மற்றும் அரசு அலுவலக வளாகம் பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றவரை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 May 2019, 4:57 pm
திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டர் மற்றும் அரசு அலுவலக வளாகம் பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றவரை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil திருவண்ணாமலையில் பட்டப் பகலில் ஒருவர்  வெட்டிக் கொலை
திருவண்ணாமலையில் பட்டப் பகலில் ஒருவர் வெட்டிக் கொலை


திருவண்ணாமலை அடுத்த குண்ணுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினகரன். இவர் இன்று காலை திருவண்ணாமலை புறவழச்pசாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மர்மக் கும்பல் ஒன்று இவரை வழி மறித்தது. அவர்களிடம் இருந்து தப்பிக்க மாவட்டக் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அரசு அலுவலகங்கள அடங்கிய வளாகப் பகுதிக்குள் தப்பிச் செல்ல தினகரன் ஓடினார். அப்போதும் விடாமல் அவரை விரட்டிய கும்பல் தினகரனை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்தில் உயிரிழநதார்.

தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி சம்பவ இடத்திற்;கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். தப்பிச் சென்ற கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி