ஆப்நகரம்

திருப்பதி அருகே இளம்பெண் புகைப்படம் வைத்து மாந்திரீக பூஜை..!

பூஜையில் பயன்படுத்தப்பட்ட இளம்பெண் புகைப்படம் யாருடையது என்பதை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 28 Jul 2020, 6:33 pm
நெல்லூர் மாவட்டம் உதயகிரி வனப்பகுதியில் ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி மாந்திரீக பூஜை நடத்தப்பட்டது. அதை கண்ட அந்த பகுதி கால்நடைகளை மேய்ப்பவர்கள் உதயகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
Samayam Tamil andhra black magic


தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மாந்திரீக பூஜை நடத்தப்பட்ட இடத்தில் பெண் உருவத்தை வரைந்து அதன் நடுவில் இளம்பெண் ஒருவரின் புகைப்படம், அறுத்து வீசப்பட்ட எலுமிச்சை பழங்கள் ஆகியவை இருப்பதை பார்த்தனர்.

மாந்திரீக பூஜை நடத்தப்பட்ட இடத்தில் இருந்த புகைப்படத்தை கைப்பற்றிய போலீசார், அந்த பெண், பூஜை நடத்திய மந்திரவாதி, பணம் கொடுத்து பூஜை நடத்திய நபர் ஆகியோர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்ப்பத்துக்கு யார் காரணம்? சொப்ன சுந்தரியும் 3 மாப்பிள்ளைகளும்...

பூஜை நடத்தப்பட்ட இடத்தில் காணப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் பெண்ணிற்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதப்படுவதால் அந்த பெண்ணை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி