ஆப்நகரம்

தென்காசியை அச்சுறுத்தும் கொள்ளையர்கள், திணறி வரும் போலீசார்..!

தென்காசியில் வீட்டை விலைக்கு வாங்க வந்திருப்பதாக கூறி துப்பாக்கி காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் 106 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Samayam Tamil 20 Sep 2020, 6:39 pm
தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். சித்த வைத்தியரான இவர் தனக்கு சொந்தமான அடுக்கு மாடி வீட்டை விற்பனை செய்ய உள்ளதாக கூறிவந்துள்ளார்.
Samayam Tamil tenkasi robbery


இந்நிலையில், நேற்று பகல் நேரத்தில் காரில் வந்து இறங்கிய 6 மர்ம நபர்கள் வீட்டை விலைக்கு வாங்க வந்துள்ளதாக நைசாக பேச்சு கொடுத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வீட்டில் தனபாலன் அவரது தம்பி தனபாலன் மற்றும் அவரது பிள்ளைகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கைதுப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களை கட்டிபோட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் வீட்டில் இருந்த 106 கிராம் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துகொண்டு அவர்கள் வந்த சிவப்பு நிற காரில் தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குற்றாலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதே துப்பட்டா... அடுத்தடுத்து தற்கொலை..! கொரோனா விட்டாலும் விடாத பிரச்சினை...

இதேபோன்று, கடந்த வாரம் தென்காசி நகர் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் பட்டபகலில் புகுந்த மர்ம நபர்கள் அவரது மனைவியை கட்டிபோட்டு 80 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வரும் நிலையில் அடுத்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த இரண்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒன்றாக இருக்ககூடும் என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி