சேலம் மாவட்டம் செவ்வாபேட்டை நரசிம்ம செட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பள்ளப்பட்டி அருகே உள்ள கோரிக்காடு பகுதியில் பருப்பு ஆலைக்கு தேவையான எந்திரங்களை தயார் செய்யும் பட்டறை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் பாஸ்கர் மற்றும் சாரதி என இருவர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பட்டறை வழக்கம் போல் திறக்கப்பட்டு பணி நடைபெற்று வந்தது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சுமார் 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் ஒன்று பட்டறையில் வைத்து சிவகுமாரை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கினர். மேலும் சிவகுமாரை அரிவாளாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களான பாஸ்கர் மற்றும் சாரதி அதனை தடுக்க முற்பட்டனர். அப்போது அந்த கும்பல் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
பின்னர் மர்ம கும்பலின் தாக்குதலால் பலத்த காயம் அடைந்த சிவக்குமார், பாஸ்கர் மற்றும் சாரதி ஆகிய மூன்று பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பத இடத்திற்கு துணை ஆணையாளர் மாடசாமி, உதவி ஆணையாளர் நாகராஜ், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் விரைந்து வந்தனர்.
காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து அவர்கள் விசாரணையை துவங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சிவகுமாருக்கு சொந்தமான வீடு திருமலைகிரி பகுதியில் உள்ளது.
அந்த வீட்டில் ஏழுமலை என்பவர் போக்கியத்திற்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் போக்கியத்திற்கு குடியிருக்கும் ஏழுமலைக்கும் சிவகுமாருக்கும் பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாகவே சிவகுமார் மீது இந்த தாக்குதல் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் யார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் பட்டறை உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு புறம் இருக்க தாக்குதல் நடைபெற்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சுமார் 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் ஒன்று பட்டறையில் வைத்து சிவகுமாரை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கினர். மேலும் சிவகுமாரை அரிவாளாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களான பாஸ்கர் மற்றும் சாரதி அதனை தடுக்க முற்பட்டனர். அப்போது அந்த கும்பல் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
பின்னர் மர்ம கும்பலின் தாக்குதலால் பலத்த காயம் அடைந்த சிவக்குமார், பாஸ்கர் மற்றும் சாரதி ஆகிய மூன்று பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பத இடத்திற்கு துணை ஆணையாளர் மாடசாமி, உதவி ஆணையாளர் நாகராஜ், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் விரைந்து வந்தனர்.
காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து அவர்கள் விசாரணையை துவங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சிவகுமாருக்கு சொந்தமான வீடு திருமலைகிரி பகுதியில் உள்ளது.
அந்த வீட்டில் ஏழுமலை என்பவர் போக்கியத்திற்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் போக்கியத்திற்கு குடியிருக்கும் ஏழுமலைக்கும் சிவகுமாருக்கும் பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாகவே சிவகுமார் மீது இந்த தாக்குதல் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் யார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் பட்டறை உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு புறம் இருக்க தாக்குதல் நடைபெற்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.