ஆப்நகரம்

பட்டப்பகலில் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.7 கோடி கொள்ளை..! ஓசூர் பரபரப்பு

ஓசூர் அருகே பைனான்ஸ் நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோடி கணக்கில் பணம், நகையை கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Jan 2021, 3:25 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Samayam Tamil video grab image


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை இந்த அலுவலகத்துக்குள் நுழைந்த 5 மர்ம நபர்கள் நிறுவன மேலாளர் உட்பட நான்கு பேரை துப்பாக்கி காட்டி மிரட்டி முடக்கியுள்ளனர்.

தொடர்ந்து, ரூ.7கோடி மதிப்பிலான தங்க நகைகள், பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். பின்னர் கொள்ளை சம்பவத்தை குறித்து நிறுவன மேலாளர் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சிசிடிவியில் பதிவான மர்ம நபர்களை குறித்து விசாரித்து வருகின்றனர்.

'சித்ராவுக்கு கன்னித்தன்மை பரிசோதனை, ஒரு நாளைக்கு ஒரு உள்ளாடை', வெளிப்படும் ரகசியங்கள்

தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி