ஆப்நகரம்

'அம்மாவோட முகத்தை கூட பாக்கல'.. வெறிச்சோடி இருக்கும் கூரை வீடு... கதறி அழும் மகன்...

தஞ்சாவூர் அருகே விபத்தில் இறந்து போன தாயை மகனுக்கு தெரிய படுத்தாமலேயே அடக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Jan 2020, 5:27 pm
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய தாய் அஞ்சலை. அஞ்சலைக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மகளும், மகனும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ராஜா தனது தாய் வசிக்க பேராவூரணியில் குடிசை ஒன்றை அமைத்துக்கொடுத்து விட்டு தஞ்சை டவுன் பகுதிக்கு குடியேறி விட்டார்.
Samayam Tamil பேராவூரணி தாயை மகனுக்கு தெரிய படுத்தாமலேயே அடக்கம் செய்துள்ள சம்பவம்


அங்கு தங்கி பெயிண்ட் வேலை செய்து வந்த ராஜா தாய்க்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவ்வப்போது வாங்கி கொடுத்து வந்துள்ளார். இந்த சமயங்களில் தாயை பார்த்து பேசிவிட்டு வரும் ராஜாவுக்கு, தாயை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வசதி இல்லை.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஞ்சலை சாலையை கடக்கும்போது வாகனம் மோதி உயிரிழந்தார். அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற சிலர் பின்னர் ஒட்டங்காடு இடுகாட்டில் அனாதை பிணமாக அடக்கம் செய்து விட்டனர்.

நிர்பயா வழக்கு: 7 நாட்களில் தூக்கு... குற்றவாளிகளின் கடைசி ஆசை என்னவென்று கேள்வி...

தாயின் இறப்பை இரண்டு நாட்களுக்கு பின்பு தெரிந்துகொண்ட ராஜா, தாய் வசித்து வந்த இடத்திற்கு விரைந்தார். அங்கு அவரது தாயை குறித்து சிலரிடம் கேட்டபோது ' அவருக்கு விபத்து நடந்ததாகவும், பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணித்ததால் சிலர் அவரது உடலை அடக்கம் செய்து விட்டனர் என கூறினர்.

இதை கேட்டு தாயின் குடிசைக்கு சென்று கதறி அழுத ராஜா, நடந்தவற்றை குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அஞ்சலையின் உடலை தோண்டி எடுத்த போலீசார், பிரேத பரிசோதனை நடத்த தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் மீது விபத்தை ஏற்படுத்தியது யார்? உடலை அடக்கம் செய்தவர்களின் விவரம் ஆகியவற்றை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி