ஆப்நகரம்

பூஜை கட்டணங்கள் பலமடங்கு..! ஆனால் நோ பாதுகாப்பு... சங்கரன் கோவில் விழாவில் கைவரிசை..

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநயினார் கோமதி அம்மன் கோவில் நடைபெற்ற சனிப்பிரதோஷ விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பல பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம்

Samayam Tamil 8 Mar 2020, 8:29 pm
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நயினார் கோமதி அம்பாள் திருக்கோவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இக்கோவிலில் நேற்று சனி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பிரதோஷ விழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி பல பக்தர்களிடம் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
Samayam Tamil சங்கரன் கோவில் விழாவில் கைவரிசை


நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்த பலர் இதுகுறித்து புகார் ஏதும் அளிக்காத நிலையில் ரதி, மகராசி, மகாலட்சுமி ஆகிய மூன்று பக்தர்கள் தங்களிடம் 16 சவரன் நகைகள் கொள்ளை அடிக்க பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் நகர காவல்துறையினர், கோவிலில் மாட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் காட்சிகளை ஆய்வு செய்தனர் கோவில் நிர்வாக அதிகாரி அறையில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் மொத்தம் உள்ள 32 கேமராக்களில் பத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பயன்பாட்டில் இல்லை என்பதும் பல கேமராக்களின் காட்சிகள் தெளிவில்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

பேசின் பாலத்திலிருந்து தண்டவாளத்தில் விழுந்த பைக்..! சோகத்தில் முடிந்த சாகசம்...

இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனினும் இருக்கும் காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே சங்கரன்கோவில் கோவிலில் பூஜை கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு அதற்கு எதிரான போராட்டங்களை பக்தர்கள் நடத்திவந்தனர். எனினும் பூஜை கட்டணங்கள் குறைக்கப்படவில்லை.

வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் செயல்படும் கோவில் நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிசிடிவி கேமராக்கள் செயல்பாடுகளை கவனிக்க தவறியது ஏன் என்ற கேள்வி பக்தர்கள் இடையே எழுந்துள்ளது. கேமராக்கள் பயன்பாட்டில் இல்லை என்பது தெரிந்திருந்தும் அதிகாரிகள் அலட்சியமாக விட்டு விட்டார்களா? கூட்ட நெரிசல் நேரத்தில் சிசிடிவி காட்சிகளை கண்காணிக்கத்தது ஏன் என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளது.

அடுத்த செய்தி