ஆப்நகரம்

ஆழ்துளை கிணற்றில் கற்களை வீசிய மர்ம நபர்கள்; விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே விவசாயின் நிலத்தில் உள்ள ஆழ்துளைகிணறை சேதப்படுத்தி கற்களை உள்ளே போட்டு சென்ற மர்மநபர்கள்.

Samayam Tamil 27 Jun 2022, 7:55 pm
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பி.தொட்டியாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. விவசாயியான சின்னத்தம்பி தனது சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.
Samayam Tamil farmer family


இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயி சின்னத்தம்பியின் நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணறில் சில மர்மநபர்கள் குழாய்களை வெளியில் வீசி எரிந்து உடைத்து விட்டு ஆழ்துளை முழுவதிலும் கற்களை கொட்டிச்சென்றுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி சின்னத்தம்பி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் வேறு வழியின்றி சின்னத்தம்பி ஆழ்துளை கிணறை சுத்தம் செய்ய முடிவு செய்தார். ஏற்கனவே ஆழ்துளை கிணறு இருந்த அதே இடத்தில் போர்வெல் இயந்திரம் மூலம் உள்ளிருந்த அடைப்புகளை எடுத்த போது அந்த துளையில் இருந்து ஏராளமான கற்கள் இரும்பு பைப்புகள் கழிவு பொருட்கள் ஏராளமாக வெளியில் வந்துள்ளது.

7 ஆண்டு காதலி 5 மாத காதலனுடன் ஓட்டம்... நண்பனிடம் மன்னிப்பு கேட்டு புதுமாப்பிள்ளை மரணம்

இதனால் மனம் உடைந்த விவசாயி சின்னத்தம்பி தன்னை விவசாயம் செய்ய விடாமல் பாதிப்பை ஏற்படுத்தும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி