ஆப்நகரம்

நகைக்காக மூதாட்டியை கொன்ற மர்ம நபர்கள்... போலீஸ் தீவிர விசாரணை

புதுச்சேரியில் நகை பணத்திற்கு ஆசைப்பட்டு மூதாட்டியை அடித்து கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம்நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 26 Jun 2022, 1:23 pm
புதுச்சேரி சேதராப்பட்டு காமராஜ் வீதியை சேர்ந்தவர் உண்ணாமலை (75). கணவரை இழந்த உண்ணாமலை தனியாக வீட்டில் வசித்து வந்தார். அருகில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டு உள்ளார்.
Samayam Tamil old lady unnaamalai


வீட்டில் பசு மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்தும் வந்தார். பால் வியாபாரம் மற்றும் வீட்டு வாடகை வருமானத்தால் எப்போதும் பண புழக்கத்துடன் மூதாட்டி இருந்துள்ளார். தங்கச்சங்கிலி, மூக்குத்தி, கம்மல் என 15 சவரன் நகைகளை எப்போதும் அணிந்து இருப்பார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அவர் எழுந்து வெளியே வரவில்லை. மாலை வரை வெளிவராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவைத் திறந்து பார்த்தபோது மூதாட்டியை ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். உடனடியாக இதுகுறித்து சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலித்த பெண் ஓட்டம்... அத்தை மகளை கரம் பிடித்த புதுமாப்பிள்ளை மரணம்... பகீர் தகவல்

மேலும், விசாரணையில் மூதாட்டி அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டுள்ளது. மூதாட்டியின் முகத்தில் காயங்கள் இருந்தன. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதுகுறித்து சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூதாட்டின் வீட்டில் வாடைக்கு குடியிருந்த வட மாநிலத்தவர்கள் கொலை செய்திருப்பார்களா அல்லது யார் என்ற கோணத்தில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி