ஆப்நகரம்

நெல்லையில் பழிக்குப்பழி: தப்பிய கணவர்கள், வெறி தீர கொலை செய்யப்பட்ட மனைவிகள்

நெல்லை அருகே முன்பகை காரணமாக இரண்டு பெண்களை வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ள மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 26 Sep 2020, 2:13 pm
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இரு நபர்களை பழிக்கு பழி வாங்க வந்த கும்பல் அவர்களது மனைவிகளை கொடூரமாக கொலை செய்து தப்பியுள்ளது.
Samayam Tamil file pic


நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சியை சேர்ந்தவர்கள் அருணாசலம் மற்றும் சுப்பையா. இன்று இவர்களது வீட்டுக்கு வந்த 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று நேராக சுப்பையா வீட்டு மீது ஒரு வெடிகுண்டை வீசினர். அதையடுத்து, வெளியே வந்த சுப்பையாவின் மனைவி சாந்தியை வெட்டிக்கொன்றனர்.

அடுத்து அந்த கும்பல் அருணாசலம் வீடு சென்று வெடிகுண்டு வீசியது. அருணாசலமும் அவரது மனைவி சண்முகத்தாயும் (50) வெளியில் தப்ப முயற்சித்துள்ளனர். அதில், அருணாசலம் வேகமாக ஓடிவிட்ட நிலையில் சண்முகத்தாய் அருகில் உள்ள வீட்டின் குளியலறைக்குள் நுழைந்தார். அவரை அங்கிருந்து வெளியே இழுத்துவந்த கும்பல் அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்து ஓடிவிட்டது.

கோவையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..!

கடந்த மார்ச் மாதம் நாங்குநேரி உச்சினிமாகாளி கோயில் அருகே ஓட்டலில் இருவர் வெட்டிக்கொல்லப்பட்டனர். அதற்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எஸ்பி மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி