ஆப்நகரம்

நாகை கூட்டு பலாத்காரம்: வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம்!

நாகை அருகே கூலி பெண் தொழிலாளி கோவிலுக்குள் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.

Samayam Tamil 8 Jan 2021, 11:04 pm
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் நாகதோப்பைச் சேர்ந்தவர் மேனகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 40 வயதான மேனகா கணவனை இழந்து பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். வருமானத்துக்கு கட்டட வேலை செய்து வரும் இவர் நேற்றிரவு வேலை முடிந்து காமராஜர் காலனி வழியாக வந்து கொண்டிருந்தார்.
Samayam Tamil gang rape


அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த இருவர் மேகலாவை பின் தொடர்ந்து சென்றனர். திடீரென மேகலாவை தாக்க தொடங்கியவர்கள், அங்கிருந்த விநாயகர் கோவிலுக்குள் இழுத்து சென்றுள்ளனர். தொடர்ந்து, 'சத்தம் போட்டால் அடித்து கொலை செய்துவிடுவேன்' என மிரட்டி மேகலாவை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

'' எனக்கு குழந்தைகள் உள்ளது. தயவு செய்து விட்டுவிடுங்கள்'' என மேகலா கெஞ்சி அழுதுள்ளார். ஆனாலும் அவரை இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை 3 மணி வரையில் விடுவிக்காமல் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து சித்தரவதை செய்துள்ளனர்.

நாகையில் கோவிலுக்குள் பெண் விடிய விடிய பலாத்காரம்! பாமக கடும் கண்டனம்

இந்த வழக்கில், அருண் ராஜ், ஆனந்த் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்த வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கை வெள்ளிபாளையம் போலீசார் விசாரித்து வந்த நிலையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த கணவனை இழந்த பெண் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவத்துக்கு தொடர் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

அடுத்த செய்தி