ஆப்நகரம்

திருவாரூரை அலற விடும் அரை நிர்வாண கொள்ளையர்கள்: கடை வீதிகளில் பீதி

திருவாரூர் அருகே அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து வெள்ளி பொருள்கள் மற்றும பணத்தை அரை நிர்வாண கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Jul 2022, 3:09 pm
திருவாரூர் அருகே அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து வெள்ளி பொருள்கள் மற்றும் பணத்தை அரை நிர்வாண கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tiruvarur crime


திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவணிதம் பகுதியைச் சேரந்தவர் கலைஅமுதன் (57). இவர் நடத்தி வந்த அடகு கடையை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடி விட்டு, பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை கலை அமுதன் கடையை திறக்க சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதேபோல், கலை அமுதனின் கடைக்கு அருகில் உள்ள முகமது இக்பால் (57) நடத்தி வரும் மளிகை கடையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. தகவலலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது கலை அமுதன் அடகு கடை உரிமை இல்லாததால், வெள்ளி பொருள்களை அடகு பிடித்து பணம் கொடுத்துள்ளார். அந்தவகையில் அவரது கடையில் இருந்த 450 கிராம் வெள்ளி பொருள்கள் திருடி போயிருந்தனர். மளிகை கடையில் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.17 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து கொரடாச் சேரி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் அரை நிர்வாணமாக 3 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அரை நிர்வாண கொள்ளையர்கள் அடுத்தடுத்து கடைகளில் திருடிச் சென்றுள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி