ஆப்நகரம்

போலீசார் வாட்சப் எண்ணிற்கு வந்த ஆபாச புகைப்படங்கள், நீட் தேர்வு பயிற்சியாளர் கைது...

ராமநாதபுரம் அருகே மக்கள் குறைகளை தெரிவிக்க காவல்துறையின் சார்பில் ஒதுக்கப்பட்ட வாட்சப் எண்ணுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 22 Jun 2020, 1:47 pm
ராமநாதபுரம்: மக்கள் அளிக்கும் புகார்களை ஏற்று அவசர நடவடிக்கை எடுக்கவும், ஆடியோ, வீடியோ மூலமாக புகார் அனுப்பவும் காவல்துறையினர் சார்பில் வாட்சப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ராமநாதபுரம், திருப்புல்லாணி ஒன்றிய காவல்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள வாட்சப் எண்ணிற்கு கடந்த புதன்கிழமை அன்று ஒரு ஆணின் நிர்வாண புகைப்படங்கள் வந்துள்ளன.
Samayam Tamil நீட் தேர்வு பயிற்சியாளர் கைது


அதை கண்டு அதிர்ச்சியான போலீசார் அந்த வாட்பஸ் எண்ணை குறித்து விசாரித்தனர். அப்போது, அந்த எண், கோயம்புத்தூரைச் சேர்ந்த சரவணம்பட்டி பிரேம்குமார் என்பவரதும், வாட்ஸப்பில் வந்த புகைப்படங்களும் அவருடையதுதான் என்றும் தெரிய வைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு வருண் குமாரின் உத்தரவின்படி, திருப்புல்லாணி காவல்துறையினர் பிரேம்குமாரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பிரேம்குமார் பொறியியல் படிப்பில் முதுநிலை பட்டம் முடித்து உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கும், நீட் மற்றும் இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைத்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கோச்சிங் கொடுத்து வந்ததவர் என்றும் தெரிந்தது.

7ஆம் வகுப்பு சிறுமியைப் பள்ளிச் சிறுவர்கள் 3 பேர் பலமுறை பாலியல் பலாத்காரம்!

ஆனால், ஏன் அவர் தனது தனிப்பட்ட புகைப்படங்களை காவல்துறை வாட்சப் எண்ணிற்கு அனுப்பினார் என்று போலீசார் மேற்படி விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்வி மையங்களில் அவர் கோச்சிங் எடுத்து வந்ததால், அங்கு ஏதேனும் விபரீத செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி