ஆப்நகரம்

நீட்: 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட பாணியில் தேர்வெழுதிய 10 பேரின் ஃபோட்டோ ரிலீஸ்!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக, 10 பேரின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

Samayam Tamil 12 Feb 2020, 12:28 am
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தமிழக மாணவர்களுக்கு பதிலாக தேர்வெழுதிய 10 பேரின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil நீட் ஆள்மாறாட்டம் : வசூல்ராஜா எம்பிபிஎஸ் பட பாணியில் தேர்வெழுதிய 10 பேரின் ஃபோட்டோ ரிலீஸ்


பிளஸ் 2 பொதுத் தேர்வில் எவ்வளவு அதிகமாக மதிப்பெண் பெற்றாலும், மருத்துவப்படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இத்தேர்வில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வேட்கை, டாக்டர் ஆக வேண்டும் என்பதை வாழ்க்கை லட்சியமாக கொண்டுள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணம் தவறில்லை என்றாலும், இந்த நோக்கமே சமயத்தில் நீட் போட்டியாளர்களை தவறு செய்ய வைத்துவிடுகிறது.

நீட் முறைகேடு விவகாரம்: தருமபுரி மருத்துவ மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

இதனை மெய்ப்பிக்கும் விதத்தில் தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நீட் தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதி, சிலர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளது தெரிய வந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிச்சத்துக்கு வந்த இத்தேர்வு முறைகேடு, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையின்போது இரண்டு பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் சிலர், பின்னர் ஜாமீனிலும் வெளி வந்தனர்.

மகன் நீட் ஆள்மாறாட்டம், தந்தை போலி மருத்துவர்: குடும்பத்துடன் மோசடி!

இந்த நிலையில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் பட பாணியில், நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு, தமிழக மாணவர்களுக்கு பதிலாக தேர்வெழுதிய 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

புகைப்படங்களில் உள்ளவர்களின் பெயர், முகவரி குறித்து தெரிய வந்தால் 94438 84395 என்ற செல்ஃபோன் எண்ணை தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி