ஆப்நகரம்

நெல்லை குவாரி விபத்து: ஓனர்களான தந்தை, மகனை சிறையில் அடைக்க நடவடிக்கை

நெல்லை கல்குவாரி விபத்தில் கைது செய்யப்பட்ட குவாரி உரிமையாளர்களான தந்தை மகன் இருவரும் மங்களூரில் இருந்து நெல்லை முன்னீர் பள்ளம் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர்.

Samayam Tamil 21 May 2022, 4:15 pm
காவல் நிலைய விசாரணைக்கு பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
Samayam Tamil nellai quarry accident update


நெல்லை மாவட்டம் திசையன் விளையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமானவர் சேம்பர் செல்வராஜ். அவரது மகன் குமார். இவர்களுக்கு சொந்தமாக பொன்னாகுடி அருகே அடைமிதிப்பான் குளத்தில் இயங்கி வரும் கல்குவாரியில் கடந்த 14ம் தேதி இரவு பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள லாரி டிரைவர் ராஜேந்திரனனை மீட்கும் பணிகள் நடத்து வருகிறது. விபத்தினை அடுத்து நடைபெற்ற விசாரணையில் இந்த கல்குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றது தெரியவந்தது இதையடுத்து முன்னீர் பள்ளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குவாரி உரிமதாரரான சங்கர நாராயணன் மற்றுல் மேலாளர் இருவரை உடனே கைது செய்தனர்.

ஒரே ஒரு முத்தம்... 17 ஆண்டுகள் ஜெயில்... அரியலூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

இருப்பினும் குவாரி உரிமையாளர்கள் செல்வராஜ் அவரது மகன் இருவரும் தலைமறைவானதால் அவர்கள் கைது செய்யப்படாமல் இருந்தனர். இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தபோது செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் இருவரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து இருவரையும் போலீசார் தமிழகம் அழைத்து வந்தனர். தற்போது இருவரும் பலத்த பாதுகாப்புடன் முன்னீர் பள்ளம் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி ராஜா சதுர்வேதி தலைமையிலான போலீசார் செல்வராஜ் மற்றும் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இருவரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உடல் பரிசோதனைக்கு பிறகு நெல்லை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர் எனபது குறிப்பிடத்தது.

அடுத்த செய்தி