ஆப்நகரம்

முந்திரி வியாபாரி கஸ்டடி மரணம்: வெளியாகியுள்ள வீடியோ ஆதாரம்

விருத்தாசலம் கிளை சிறையில் கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வீடியோ ஆதாரங்களை சிபிசிஐடி போலீசாரிடம் கொடுத்து புகார் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 17 Nov 2020, 6:29 pm
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன், வடலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு போலீசாரால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
Samayam Tamil விருத்தாசலம் கிளை சிறை மரணம்


இதையடுத்து திருட்டு வழக்கில் தனது கணவரை தவறுதலாக கைது செய்து கொடூர கொலையை போலீசார் அரங்கேற்றி இருப்பதாக செல்வமுருகனின் மனைவி கடலூர் காவல் ஆணையருக்கு கடிதம் எழுதி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார். மேலும், போலீசார் தன்னிடம் 10 பவுன் செயின் கேட்டு மிரட்டினார்கள் என்றும் அதை கொடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரியாது என்று மிரட்டினார்கள் என்றும் தமது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முந்திரி வியாபாரி செல்வமுருகனின் மரணம் நிகழ்ந்ததில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தொடர் கண்டனத்தை எழுப்பியும், கஸ்டடி மரணங்களில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், விருத்தாச்சலம் கிளை சிறையில் மரணமடைந்த செல்வமுருகன் மீது போலீசார் பொய் வழக்கை பதிவு செய்துள்ளதாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தம்பியின் மனைவியை ரோட்டில் இழுத்து வந்து சித்ரவதை..! நோயாளி கணவன் கதறல்

அந்த வீடியோவில், வடலூர் போலீசார் சிலர் நகையை அடகு கடையில் வைப்பதும், மீட்பதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அக்டோபர்30 ஆம் தேதி செல்வமுருகன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், அக்டோபர் 29ஆம் தேதி காவல்துறையினர் செல்வமுருகனிடம் நகைக்கடையில் நகையை பறிமுதல் செய்வதற்காக அழைத்து சென்ற காட்சிகள் இந்த சிசிடிவியில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆதாரத்தை பெற்றுள்ள சிபிசிஐடி போலீசார் அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி