ஆப்நகரம்

திருப்பூர் அருகே மறு வீட்டிற்கு சென்ற மறுநாள் புதுமணப் பெண் தற்கொலை..!

திருப்பூர் அருகே திருமணம் முடிந்த ஐந்தாவது நாளில் புதுமணப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Jul 2020, 10:30 pm
திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரைச் சேர்ந்தவர்கள் ராஜு - வள்ளியம்மாள் தமபதியினர். இவர்களுக்கு தேவி, அழகேஸ்வரி என இரண்டு மகள்கள் இருந்தனர். இதில் மகேஸ்வரிக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தேவிக்கு (20) அவரது மாமன் மகனான உடுமலையைச் சேர்ந்த செல்வராஜ் (29) என்பவருடன் திருமணம் செய்துவைக்க முடிவு செய்து செய்தனர்.
Samayam Tamil tirupur women suicide


இந்நிலையில், இருவருக்கும் கடந்த 8 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. அதையடுத்து புது தம்பதியான இருவரும் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மறுவீடு நிகழ்வுக்கு சென்றனர். கடந்த ஞாயிற்று கிழமை அன்று காலை உணவு முடிந்த பிறகு செல்வராக வேலை நிமித்தமாக வெளியில் சென்றுள்ளார்.

இந்நிலையில், மதிய விருந்துக்காக தேவியை அழைப்பதற்கு அவருடைய அறைக்கு சென்ற போது, கதவு உள்புறம் தாழ் போட்டிருந்ததால் தட்டி பார்த்தனர். ஆனால், வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமலும், தேவியிடம் இருந்து எந்த சத்தமும் வராமலும் இருந்ததால், சந்தேகப்பட்ட உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

சாத்தான்குளம் சித்திரவதை கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியை அறிவித்தது சிபிஐ..!

அப்போது, தேவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவரை மீட்ட உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார் விசாரணை செய்ததில், தேவியின் சம்மதத்துடன்தான் மாமன் மகனுக்கு திருமணம் நடந்ததாக தெரிய வந்தது. இருப்பினும் தேவி தற்கொலை செய்துகொண்ட காரணம் என்ன என்பதை குறித்து போலீசார் மேற்படி விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி