ஆப்நகரம்

காதலியுடன் உல்லாசம்... வேறொரு பெண்ணுக்கு தாலி... மூன்றாவது நாளில் சிறைக்கு சென்ற புதுமாப்பிள்ளை

புதுச்சேரி மாநிலத்தில் காதலியை பலாத்காரம் செய்து விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை திருமணமான 3-வது நாளில் சிறையில் அடைப்பு.

Samayam Tamil 20 May 2022, 2:39 pm
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 21 வயதான இளம்பெண். இவர் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Samayam Tamil puducherry news


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே நிறுவனத்தில் பணி செய்யும் கருவடிக்குப்பம் வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்த கணேஷ் (வயது 26) என்பவரும், அந்த பெண்ணும் 9 மாதமாக காதலித்து வந்துள்ளனர். அப்போது கணேஷ் திருமண ஆசை காட்டி அந்த பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 15-ந்தேதி கடலூரை சேர்ந்த மற்றொரு பெண்ணை கணேஷ் திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்து தான் ஏமாற்றப்பட்டதை தாங்க முடியாமல் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நம்பிக்கை மோசடி, ஏமாற்றி பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் புதுமாப்பிள்ளை கணேஷ் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நீட் தேர்வுக்கு பயந்து பெண் மருத்துவர் விபரீத முடிவு... கோவையில் முதல் சம்பவம்

இதையடுத்து நேற்று முன்தினம் அதாவது, திருமணமான 3-வது நாளில் கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது வீடு அருகே கணேஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.தொடர்ந்து நடத்திய விசாரணையில் கணேஷ் இதற்கு முன்பு பல பெண்களை காதலித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி