ஆப்நகரம்

புதுச்சேரி: நித்யானந்தா சீடர் படுகொலை - காரணம் என்ன?

புதுச்சேரியில் நித்யானந்தாவின் நெருங்கிய சீடர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 30 Jan 2020, 11:10 am
தமிழ்நாட்டில் சமீபகாலமாக ‘ஹாட்’ டாபிக்காக இருப்பவர் நித்யானந்தா. சர்ச்சையைக் கிளப்பும் காமெடிப் பேச்சுகளை பேசி வந்த நித்யானந்தா மேல் குழந்தைகள், பெண்களை கடத்தி கொடுமைப்படுத்தினார் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Samayam Tamil நித்யானந்தா


இந்தியாவில் பல நகரங்களில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருடன் நெருக்கமாக இருந்த சீடர்கள் பலரும் வெளியே வந்து அவருக்கு எதிராக புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க கைலாஷ் என்ற நாட்டை உருவாக்கி அங்கு செல்வதாக அறிவித்தார்.

விடிஞ்சா கல்யாணம்... ஜாமீன் பெற்ற இளைஞர்: நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!!

தொடர்ந்து சர்வதேச காவல்துறையும் அவரை தேடி வரும் நிலையில் நித்யானந்தா தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் நித்யானந்தாவின் நெருங்கிய சீடரான வஜ்ரவேலு என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாஜக பிரமுகர் கொலை வழக்கு : விசாரணை அதிகாரி அதிரடி மாற்றம்!!

வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் பேக்கரி தொழில் நடத்திவந்த வஜ்ரவேலு தமது உறவினரிடம் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு காரில் வந்துகொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் வீடி திரும்பாததால் குடும்பத்தினர் அவரைத் தேடியபோது குருவி நத்தம் பகுதியில் காரில் ஆடைகள் களையப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.

பணத்திற்காக இந்த கொலை நடந்துள்ளதா, முன் விரோதம் காரணமாக நடந்துள்ளதா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காந்தியின் அரிய புகைப்படங்கள்: ‘காந்தி ஸ்மிருதி’ ஒரு விசிட்!

நித்யானந்தாவுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்தவர் வஜ்ரவேலு. நித்யானந்தாவை புதுச்சேரிக்கு அழைத்து வந்து ஏம்பலம் பகுதியில் தலைமை ஆசிரமம் அமைக்க காரணமாக இருந்தவர் வஜ்ரவேலு என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி