ஆப்நகரம்

பாஜகவினர் கைது ஏன்..? அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்..!

கோவையில் பெட்ரோல் குண்டு சம்பவத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2022, 6:45 pm
உலக பிசியோதெரபி தினத்தையொட்டி கோவை மண்டல அளவிலான அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியத்தில் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டார்.
Samayam Tamil sendhil balaji


அப்போது சென்னையை சேர்ந்த மருத்துவர் ஜெகதீசனுக்கு அப்துல்கலாம் விருதினையும் மருத்துவர் ரகுநாத்திற்கு இளம் சாதனையாளர் விருதினையும், கன்னியாகுமரியை சேர்ந்த டாக்டர். ஆல்டரின் பிக்னாவிற்கு சிறந்த பிஸியோதெரபி மருத்துவர் விருதினையும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியின் போது கூறுகையில்; கோவையில் பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கான கோரிக்கைககள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் துறை அதிகாரிகளிடம் முன் வைக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு சாலை மறியலில் ஈடுபடுவது சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பதில் ஈடுபட்டவர்களை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் கோவையில் ஏதோ ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுவது போல தகவல்கள் பரவுகின்றன. கோவையில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

இதனை அடுத்து கோவை மாநகரில் நடைபெற்ற சம்பவங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார். கோவையில் 23ஆம் தேதி மதியம் குனியமுத்தூர் பகுதியில் ரகு என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டில் நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்டவரும் அதேபோல குனியமுத்தூர் பகுதியில் பாஜக பரத் வீட்டில் வீசப்பட்ட சீமெண்ணை குண்டு வீசிய சம்பவங்களில் ஜேசுராஸ், இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் எஸ்.டி.பி.ஐ.யை சேர்ந்தவர்கள். அதே போல பாஜக அலுவலகத்தில் மற்றும் ஒப்பணக்கார வீதியில் உள்ள கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நபர்களை நெருங்கி விட்டோம், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி