ஆப்நகரம்

கடத்தல் பொருள் வாங்கிய தொழிலதிபரிடம் பணம் கொள்ளை!

கடந்த ஞாயிறு மதியம் செங்கல்பட்டில் உள்ள பரனூர் டோல் பிளாசா அருகே பிரபல பெண் தொழிலதிபரின் மேலாளர் தயாநிதியிடம் இருந்து 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று 9 கோடி பணம் மற்றும் 130 சவரன் நகைகளைக் கொள்ளை அடித்து தப்பியுள்ளனர்.

Samayam Tamil 29 Apr 2019, 4:24 pm
கடந்த ஞாயிறு மதியம் செங்கல்பட்டில் உள்ள பரனூர் டோல் பிளாசா அருகே பிரபல பெண் தொழிலதிபரின் மேலாளர் தயாநிதியிடம் இருந்து 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று 9 கோடி பணம் மற்றும் 130 சவரன் நகைகளைக் கொள்ளை அடித்து தப்பியுள்ளனர்.
Samayam Tamil money


தயாநிதி பணம் மற்றும் நகைகளை தன் காரில் வைத்து மதுரையில் இருந்து சென்னைக்கு எடுத்துச் சென்றபோது இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர் பிரபல பெண் தொழிலதிபர் கிரண் ராவ்-ன் மேலாளர் ஆவார்.

முன்னதாக கிரண் ராவ் தன் ரெஸ்டாரெண்டை அலங்கரிக்க கலைபொருட்கள் வாங்க நினைத்தார். இதற்காக பிரபல கலைபொருட்கள் கடத்தல்காரர் ரன்வீர் ஷாவிடம் விலை பேசினார். இந்த கடத்தல் சிலைகள் கிரணின் ரெஸ்டாரெண்டுக்கு வந்து சேர்ந்தன. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரன்வீர் ஷாவை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். தான் கடத்தப்பட்ட சிலைகளை தொழிலதிபர் கிரணுக்கு விற்றதை ஷா அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட கிரண், ரெஸ்டாரெண்டிடில் உள்ள கலை பொருட்களை போயஸ் கார்டனில் உள்ள தனது கெஸ்ட் ஹவுஸில் உள்ள மைதானத்தில் புதைத்து வைக்க ஏற்பாடு செய்தார். கடந்த ஆண்டு அக்., மாதம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மைதானத்தில் இருந்து சிலைகளைத் தோண்டி எடுத்தனர். இதனையடுத்து கிரணை கைது செய்ய மும்மரம் காட்டினர்.

இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்ற போர்வையில் வந்த 7 மர்ம நபர்கள், கடந்த ஞாயிறு மதியம் செங்கல்பட்டில் உள்ள பரனூர் டோல் பிளாசா அருகே காரில் வந்துகொண்டு இருந்த தயாநிதி என்பவரிடம் இருந்து, 9 கோடி பணம் மற்றும் 130 சவரன் நகைகளைக் கொள்ளை அடித்து தப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி