ஆப்நகரம்

திருந்தி வாழ நினைத்த நர்ஸ் தற்கொலை.... ருசி பார்த்த பூனையாக நண்பரின் டார்ச்சர்...

ஓசூரில் அரசு செவிலியர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டிய தட்டச்சர் கைது செய்யப்பட்டிருப்பது வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Apr 2022, 12:15 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட் தணிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி கல்பனா தேவி (36). ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக செவிலியராக பணியாற்றி வந்தார்.
Samayam Tamil ஓசூர் நர்ஸ் தற்கொலை
ஓசூர் நர்ஸ் தற்கொலை


இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் தேதி வீட்டில் தனியாக இருந்த கல்பனா தேவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் தட்டச்சராக பணியாற்றி வந்த எடப்பாடியைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பவருக்கும் கல்பனாதேவிக்கும் தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் கல்பனா தேவியின் குடும்பத்தினருக்கு விவகாரம் தெரியவந்ததால் ரமேஷிடம் இருந்து கல்பனாதேவி தொடர்பை துண்டித்துகொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்துள்ளார். இதை விரும்பாத ரமேஷ், உன்னை அவ்வளவு சுலபமாக விட முடியாது என கூறி கல்பனா தேவி பணிக்கு வரும்போது அவரை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

ரமேஷ்


இது குறித்து கல்பனா தேவி வெளியில் சொல்ல முடியாமல் மனமுடைந்து காணப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. கல்பனா தேவி தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்த ரமேஷ் காவல்துறையினர் எப்படியும் என்னை கைது செய்துவிடுவார் என நினைத்து தலைமறைவாக இருந்து வந்தார்.

ஆண் நண்பருடன் கிசுகிசு போன் கால்... காதல் மனைவியை அடித்தே கொன்ற ஆட்டோ டிரைவர்

இந்த நிலையில், தனிப்படை அமைத்த சிப்காட் போலீசார் 5 மாதங்களுக்குப் பிறகு ரமேஷை கைது செய்து, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி