ஆப்நகரம்

'ஓசி சிக்கன் ரைஸ்' பாஜக நிர்வாகிகள் இருவர் கைது..! ஒருவர் பயந்து ஓட்டம்

திருவல்லிக்கேனி அருகே ஓசியில் சாப்பாடு சாப்பிட்டு காசு தர மறுத்த இரண்டு பாஜக நிர்வாகிகள் கைது.

Samayam Tamil 14 Jan 2021, 9:22 pm
கடந்த 13 ஆம் தேதி திருவல்லிக்கேனி பாஜக பகுதிச் செயலாளர் ஒருவர் மது அருந்திவிட்டு முத்தையா தெருவில் ஒரு கடையில் காசு கொடுக்காமல் சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டினார். அப்போது, அவர்களிடம் ஓட்டல் ஊழியர்களும், கடை உரிமையாளர் அபுபக்கரும் பணம் கேட்டதற்கு திருவல்லிக்கேனி பாஜக பகுதி செயலாளர் நான், அமித் ஷா பி.ஏ,க்கு போன் போட்டுருவேன்.
Samayam Tamil file pic


1000 பேர் ரெடியா இருக்காங்க, மதக் கலவரம் பண்ணிடுவோம்” என மிரட்டல் விடுத்தார். அவர் இவ்வாறு மிரட்டல்விடுப்பதை காவல் துறையினர் பார்த்தபடி நின்றிருந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதையடுத்து, சிக்கன் ரைஸுக்காக மதக் கலவரம் செய்வோம் என கூறும் வீடியோ வைரலானதால் ‘ஓசி சிக்கன் ரைஸ் பாஜக’ என்ற ஹாஸ்டேக் ட்ரெண்டானது.

சென்னையில் 11 பெண்களை ஏமாற்றி திருமணம்..! முதலிரவு வில்லன் கைது

இந்நிலையில், இதுதொடர்பாக திருவல்லிக் கேணியைச் சேர்ந்த பாஸ்கர்(32), புருஷோத்தமன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பாஸ்கர், புருஷோத்தமன், திருவல்லிக்கேணி பகுதி பாஜக நிர்வாகிகள் என போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

அடுத்த செய்தி