ஆப்நகரம்

தாம்பரம் அருகே ஒடிசா பெண் கொலை..! கூட்டு பலாத்காரம்.?

தாம்பரத்தை அடுத்த படைப்பை அருகே வாடகை வீட்டில் தனி வேலை பார்த்த வந்த ஒடிசா பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Jan 2020, 6:07 pm
சென்னை தாம்பரத்தை அடுத்த படைப்பை ஆத்தனஞ்சேரி பகுதியில் ஒடிசாவைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் வாடகை வீட்டில் தங்கி வந்தார். இவருடன் தோழி ஒருவரும் வசித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒரகடம் 'ராயல் இன்ஃபீல்டு' நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர்கள். இந்த நிலையில் நேற்று ( செவ்வாய் கிழமை ) பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரவு நேர பணி என்பதால், அவருடைய தோழி காலையில் வேலைக்கு சென்று விட ஒடிசா பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
Samayam Tamil தாம்பரம் அருகே ஒடிசா பெண் கொலை


பின்னர் பணி முடிந்த பிறகு அவருடைய தோழி வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டப்படாமல் இருந்தது. இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று அவர் பாத்தபோது ஒடிசா பெண் மயங்கிய விழுந்தவாறு அசைவின்றி தரையில் கிடந்துள்ளார்.

மேலும் அவருடைய ஆடைகள் கலைந்தவாறு இருந்துள்ளது. பலமுறை முயற்சி செய்தும் அவர் கண் விழிக்காமல் இருந்ததால், அதிர்ச்சியடைந்த தோழி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

நித்யானந்தா லாக்..! அதிரடியாக இறங்கிய இன்டர்போல்... அடுத்த வீடியோ வருமா?

அங்கு விரைந்த மருத்துவ உதவியாளர்கள் ஒடிசா பெண் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து மணிமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தாம்பரத்தில் தங்கி வேலை பார்த்து வந்த இப்பெண்ணின் காதலனை அழைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் இளம்பெண்ணின் உடலில் இருக்கும் நக கீறல்களை கொண்டு அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி