ஆப்நகரம்

பேத்திக்கு ஏண்டா போன் பண்ணி டார்ச்சர் பண்றே?- தாத்தாவை கொடூரமாக கொன்ற இளைஞர்கள்!

தனது பேத்தியை தொந்தரவு செய்த இளைஞரை தட்டிக் கேட்டதால், தாத்தா கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Samayam Tamil 20 Aug 2019, 9:53 am
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த காந்தி நகர் அருகே இன்னம்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.ரத்தினம்(75). இவரது பேத்தியை அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
Samayam Tamil Murder


அடிக்கடி போன் செய்து தவறுதலாக நடந்து கொண்டுள்ளனர். கடந்த ஞாயிறு அன்று இரவு 9 மணியளவில், ரத்தினம் மற்றும் பேத்தி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது ரத்தினம் மகன் ஆர்.ராமச்சந்திரன் வெளியே சென்றுள்ளார்.

Also Read: காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை, சித்ரவதை செய்து எரித்துக் கொன்ற 15 வயது மகள்..!

இந்நிலையில் அப்பெண்ணின் மொபைலுக்கு அதே இளைஞர்கள் போன் செய்துள்ளனர். உடனே இதுகுறித்து தனது தாத்தாவிடம் கூறியுள்ளார். அவர் வெளியே வந்து பார்த்த போது, இரண்டு இளைஞர்களும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் ”கட்டை” பிரகாஷ்(25), பிரகாஷ்(25) ஆகியோர் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது இருவரையும் ரத்தினம் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு, முதியவரை கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர்.

Also Read: தண்ணி அடிச்சிட்டு இப்படியா கார் ஓட்றது? நடைபாதை பயங்கரம்- தூக்கி வீசப்பட்ட பொதுமக்கள்!

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முதியவரின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். உடனே அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராமச்சந்திரன் சுவாமி மலை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் மாயமான இரண்டு இளைஞர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Also Read: சென்னை வந்த ரயிலில் பரபரப்பு- பொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி!

அடுத்த செய்தி