ஆப்நகரம்

தாறுமாறா ஓடிய ஆம்னி; தருமபுரி அருகே அதிர்ச்சி- பொதுமக்களுக்கு நடந்த பயங்கரம்!

ஆம்னி பேருந்து ஒன்று போதையில் தள்ளாடி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Oct 2019, 9:55 am
பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென பேருந்து தள்ளாட தொடங்கியது. தொப்பூர் டோல்கேட்டை நெருங்கி கொண்டிருந்த போது ஆட்டம் அதிகமானது.
Samayam Tamil Bus Accident


இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு தாறுமாறாக ஓடிய பேருந்தை பின்னால் காரில் வந்தவர்கள் படம்பிடித்தனர். அதேசமயம் வாகனங்கள் செல்ல வழிவிடாமல் சென்றதால், பின்னால் வந்தவர்கள் ஒலி எழுப்பினர்.

மொட்டை மாடியில் போன் பேசிய திருச்சி இளைஞர் கீழே விழுந்து பலி.! சென்னையில் சர்ச்சை..

ஆனால் இவற்றை பொருட்படுத்தாமல், ஓட்டுநர் வாகனத்தை ஒட்டிச் சென்றுள்ளார். இந்த சூழலில் மற்றொரு தனியார் ஆம்னி பேருந்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத வகையில் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பில் மோதி பேருந்து கவிழ்ந்தது.

திருநங்கை வேடமிட்டு வாலிபரிடம் கைவரிசை..! பக்கா பிளானுடன் வந்து சிறைக்கு சென்ற இருவரின் கூத்து..

இதையடுத்து பேருந்தில் சிக்கிக் கொண்ட பொதுமக்கள் சிரமப்பட்டு வெளியேறினர். பின்னர் ஓட்டுநரை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர். அதாவது, மதுபோதையில் ஓட்டுநர் பேருந்தை தாறுமாறாக ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.

கோவையில் மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம்: கமிஷ்னர் வைத்த ‘செக்’!

அவரை போலீசில் பிடித்துக் கொண்டனர். போதையில் வாகனம் ஓட்டினால் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதற்கு இந்த சம்பவம் மிகச்சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி