ஆப்நகரம்

ஒருவர் பலி, நொறுங்கிய பேருந்து... கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் கோர விபத்து..!

சென்னை கிண்டி அருகே இரும்பு வழிகாட்டி பலகை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி இருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Aug 2022, 4:38 pm
சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் உள்ள இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் ஓடிக்கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இரும்பு பலகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil guindy signboard collapse


எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள விபத்தால் அப்பகுதியில் சென்று வரும் வாகன ஓட்டிகள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், அங்கு போலீசாருடன் பொதுமக்கள் ஏராளமானோர் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும், இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மாநகர பேருந்தின் முன் பக்க கண்ணாடி நொறுங்கிய நிலையில் பலத்த சேதமடைந்துள்ளது. சின்ன யானை வாகனம் ஒன்று சாலையில் கவிழ்ந்துள்ளது. அனைத்தையும் அகற்ற நேர தாமதம் ஆகும் என்பதால் கத்திப்பாரா சந்திப்பு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


வார விடுமுறை நாள் என்பதால் அந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய உயிர் சேதம் நிகழவில்லை. ஒருவர் உயிரிழந்த தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரிகள் விளக்கமளிக்கவுள்ளனர்.

அடுத்த செய்தி