ஆப்நகரம்

வெறித்தனமாக மோதிக்கொண்ட கோவை பள்ளி மாணவர்கள்:ஒரு மாணவன் உயிரிழப்பு...

கோவை அருகே பள்ளி மாணவர்கள் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழப்பு

Samayam Tamil 11 Jan 2022, 2:09 pm
கோவையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த மாணவர் உயிரிழப்பு.சண்டை தொடர்பான அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
Samayam Tamil கோவை பள்ளி மாணவர்கள் மோதல்


கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆலாந்துறை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் இருபிரிவினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

இதனிடையே கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு வெளியே மாணவர்களின் இருபிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவரிடம் இதுதொடர்பாக தெரிவித்துள்ளனர்.

அந்த முன்னாள் மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்களை தன் பையில் மறைத்து வைத்திருத்த கத்தியை வைத்து சரமாறியாக தாக்கி உள்ளார்.


இதில் மூன்று மாணவர்களுக்கு கத்தி குத்து ஏற்பட்டது. இதில் ஒரு மாணவருக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அந்த மூன்று பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சமபவம் தொடர்பாக ஆலந்துறை போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து 3 பேரை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இதனிடையே தலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடத்தையில் சந்தேகம்... மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற கணவன்..!

இதனையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி