ஆப்நகரம்

ஆன்-லைனில் வாலிபரை ஏமாற்றி 15 லட்சம் ரூபாய் அபேஸ்: நைஜீரியர்கள் கைது!!

ஊருக்கு சர்ச், இலவச மருத்துவமனை கட்டித் தருகிறோம் எனக் கூறி, ஓங்கோலை சேர்ந்த நபரிடம் ஆன்-லைனில் 14 லட்சம் ரூபாய் சுருட்டிய நைஜீரியாவைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

Samayam Tamil 27 Feb 2020, 12:43 am
நைஜீரியாவை சேர்ந்த பீட்டர் டேனியல் என்பவர், தான் மத போதகர் என்றும், இந்தியாவில் சர்ச், இலவச மருத்துவமனை ஆகியவற்றை கட்ட ஆவலாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
Samayam Tamil ஆன்-லைனில் ஏமாற்றி 15 லட்சம் ரூபாய் அபேஸ்: நைஜீரியர்கள் கைது


ஏடிஎம் போறீங்களா; ஸ்கிம்மர் இருக்கானு பாத்தீங்களா? புதுச்சேரியில் அதிர்ச்சியூட்டிய நைஜீரியர்!

அதனை உண்மை என்று நம்பிய, ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்த அஞ்சய்யா என்பவர், வலைதளங்கள் மூலம் பீட்டர் டேனியல் உடன் நட்பை ஏற்படுத்தி பழகி வந்தார்.

இந்த நிலையில், "தான் 2.4 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்துடன் விரைவில் இந்தியா வருகிறேன் என்றும், சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு 15 லட்ச ரூபாய் தேவை உள்ளது" என்று பீட்டர் டேனியல் அஞ்சயாவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தரிசன டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை : இடைத்தரகர்களை தண்டித்த ஏழுமலையான்!!

இதனை உண்மை என்று நம்பிய அஞ்சயா பல தவணைகளில் 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பீட்டர் டேனியலுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பின் பீட்டர் டேனியல் இடமிருந்து அஞ்சய்யாவுக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டது பற்றி ஓங்கோல் போலீசில் அஞ்சய்யா புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி அஞ்சய்யாவிடம் மோசடி செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சமூக வலைத்தளங்களில் போலியாக பிரச்சாரம் செய்து அஞ்சய்யா வசமிருந்து 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று கொண்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அடுத்த செய்தி