மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சீரடி என்ற இடம் சாய்பாபாவின் வீடு என்று அறியப்படுகிறது. இங்கு சாய்பாபாவுக்கு கோயில் உள்ளது. சீரடி சாய்பாபாவை ஒரு தடவை தரிசனம் செய்தாலே பாவங்கள் தொலைந்து விடும் என்கிற நம்பிக்கை உள்ளதால் நாள்தோறும் இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாய்பாபாவை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு பிறகு, சீரடிக்குதான் அதிக பக்தர்கள் வருவதாக சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கொரோனா 2ஆவது அலை பரவல் காரணமாக தற்போது சீரடி சாய்பாபா கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பூஜைகள் மட்டுமே கோயில் நிர்வாகத்தினால் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சாய்பாபா கோயில் மூடப்பட்டிப்பதை பயன்பத்திக் கொண்டு மோசடி கும்பல் ஒன்று ஆன்லைன் மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக கோயில் நிர்வாக அறக்கட்டளையான சீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் (Shri Saibaba Sansthan Trust) குற்றம் சாட்டியுள்ளது.
ஸ்ரீசாய்பாபா சேவாபவி சன்ஸ்தான் ஷிர்டி என்ற பெயரில் பக்தர்களிடம் அன்னதானம், பூஜை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகப் பணிகளுக்காக நன்கொடை வழங்கலாம் என்று கோயில் நிர்வாகம் போன்று சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது. இண்டர்னெட் பேங்கிங், கூகுள் பே, பேடி-எம் உள்ளிட்டவைகள் மூலம் நன்கொடை வழங்கலாம் என்றும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதனை நம்பி பக்தர்களும் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்த அமைப்புக்கும் சீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இந்த ஆன்லைன் மோசடியை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள கோயில் நிர்வாகம், பக்தர்கள் நன்கொடை கொடுப்பதாக இருந்தால் சீரடி சாய்பாபா கோயில் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பயன்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், சாய்பாபா கோயில் மூடப்பட்டிப்பதை பயன்பத்திக் கொண்டு மோசடி கும்பல் ஒன்று ஆன்லைன் மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக கோயில் நிர்வாக அறக்கட்டளையான சீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் (Shri Saibaba Sansthan Trust) குற்றம் சாட்டியுள்ளது.
ஸ்ரீசாய்பாபா சேவாபவி சன்ஸ்தான் ஷிர்டி என்ற பெயரில் பக்தர்களிடம் அன்னதானம், பூஜை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகப் பணிகளுக்காக நன்கொடை வழங்கலாம் என்று கோயில் நிர்வாகம் போன்று சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது. இண்டர்னெட் பேங்கிங், கூகுள் பே, பேடி-எம் உள்ளிட்டவைகள் மூலம் நன்கொடை வழங்கலாம் என்றும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதனை நம்பி பக்தர்களும் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்த அமைப்புக்கும் சீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இந்த ஆன்லைன் மோசடியை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள கோயில் நிர்வாகம், பக்தர்கள் நன்கொடை கொடுப்பதாக இருந்தால் சீரடி சாய்பாபா கோயில் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பயன்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.