ஆப்நகரம்

தந்தை-மனைவி உறவுமீது சந்தேகப்பட்டு இளைஞர் செய்த கொலைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிப்பவர் கார்த்திகேயன்(30). இவரது தந்தை தனபால். கார்த்திகேயனின் மனைவி ராஜேஸ்வரி. இருவருக்கும் மூன்று மாதத்தில் ஓர் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தன் தந்தைக்கும் ராஜேஸ்வரிக்கும் பிறந்தது என கார்த்திகேயன் சந்தேகப்பட்டு குழந்தையையும் தந்தையையும் கொலை செய்து கைதாகியுள்ளார்.

Samayam Tamil 24 Apr 2019, 3:02 pm
திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிப்பவர் கார்த்திகேயன்(30). இவரது தந்தை தனபால். கார்த்திகேயனின் மனைவி ராஜேஸ்வரி. இருவருக்கும் மூன்று மாதத்தில் ஓர் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தன் தந்தைக்கும் ராஜேஸ்வரிக்கும் பிறந்தது என கார்த்திகேயன் சந்தேகப்பட்டார்.
Samayam Tamil Capture


இதனால் குழந்தை யாருக்குப் பிறந்தது என அவ்வப்போது மனைவி ராஜேஸ்வரியை கேட்டு கார்த்திகேயன் மிரட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தனபால் சமாதானப்படுத்தி வைப்பார். ஒருநாள் குழந்தையை கார்த்திகேயன் கொன்றுவிட்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ராஜேஸ்வரி தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மகன் கார்த்திகேயனை ஜாமீனில் வெளியே கொண்டுவந்தார் தனபால்.

வீட்டு வாசல் திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த தந்தையை கார்திகேயன் கத்தி கொண்டு கொலை செய்து, பின்னர் தானே காவலர்கலிடம் சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.

அடுத்த செய்தி