ஆப்நகரம்

பெண்களை கட்டி இழுத்துச் சென்ற பஞ்சாயத்துத் தலைவர்..! மேற்கு வங்கத்தில் அட்டூழியம்

மேற்கு வங்கத்தில் அகல சாலை அமைக்க நிலம் தர மறுத்த ஆரம்ப பள்ளி ஆசிரியையை ஊர் தலைவரே அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Samayam Tamil 3 Feb 2020, 6:18 pm
மேற்கு வங்கத்தின் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் சாலை அமைப்பதற்காக தனது நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முயன்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆசிரியை உள்ளிட்ட இரண்டு பெண்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்து இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil பெண்களை கட்டி இழுத்துச் சென்ற பஞ்சாயத்துத் தலைவர்


மேற்குவங்கம் மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தின் பதாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்மிருத்திக்கோனா தாஸ். இவர் அப்பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஆரசியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பதாநகர் சாலையை 12 அடிக்கு அகலப்படுத்துவதாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம தலைவராக இருக்கும் அமல் சர்க்கார் அந்த ஆசிரியையிடம் இடம் கேட்டு பெற்றுள்ளார்.


ஆனால் ஆசிரியையின் வீட்டின் முன் அமைக்கப்படும் அந்த சாலை 12 அடி அகலமாக இருக்கும் என்று கூறிவிட்டு சாலையை 24 அடிக்கு அகலப்படுத்த பஞ்சாயத்து சார்பில் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிக நிலத்தை இழக்க நேரிடும் என்பதால் ஸ்மிருத்திக்கோனா தாஸ் தான் கொடுத்த நிலத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அயனாவரம் பாலியல் வழக்கு: 4 பேருக்கு சாகும் வரை சிறை..! 15 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு...

ஆனால் பஞ்சாயத்து தலைவர் அமல் சர்க்கார், நிலத்தை திருப்பி கொடுக்க மறுத்ததால் ஆசிரியை அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அமல் சர்க்கார் 5 பேர் கொண்ட நபர்களை கொண்டு அந்த ஆசிரியயையின் முழங்காலை கயிற்றால் கட்டி சாலையில் தரதரவென இழுத்து சென்று தாக்கினார். மேலும் தடுக்க வந்த அவரது சகோதரியையும் அதேபோல கயிற்றால் கட்டி இழுத்து சென்றனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் இரண்டு நபர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த சிலர் அதை வைரலாக்கியதை அடுத்து தினாஜ்பூர் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அர்பிதா கோஷ், அமல் சர்க்காரை தலைவர் பதவியிலிருந்து இடை நீக்கம் செய்தார். இருப்பினும் அவர் மீது சட்ட ரீதியாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி